பறித்துக் கொள் என்று
தோட்டக்காரன் சொன்னபின்னும்
பூவோடு 
மல்லுக்கட்ட வேண்டி இருக்கிறது என்பதை !

சுடரை சந்திக்க ஆவலாய் 
காத்திருந்தான் 

சுடரை இன்னும் காணவில்லை
கவிதைகள் சொல்வது நிஜம் தான்.

காத்திருக்கும் நிமிடங்கள்
நொண்டியடிக்கும்
கேள்விக் குறியோடு காத்திருந்தாலோ
அது நத்தையோட்டுக்குள் தவழுதல் பழகும்

அதோ வருகிறாள் சுடர்
எழுந்துவிட்டான்
இனம் புரியாத ஒரு பதட்டம்..

இதென்ன
நாக்கு கரைந்து கொண்டிருக்கிறதா
உள்ளுக்குள் உமிழ்நீர் ஊற்றெடுக்கிறதே !

நாக்கு நகரமறுத்து
நங்கூரமாக வடிவெடுத்ததாய்
ஒரு பிரமை !

அவள் முகத்தைப் பார்த்தான்.
முகம் மனசின் கண்ணாடி தான்
பெண்களின்
முகம் கூட ஆழமானது !
எதுவும் விளங்கிக் கொள்ள முடியவில்லை !!

சுடர்
அம்மா அப்பா எப்படி இருக்காங்க ?
ஒரு வார்த்தை கேட்டான்.

அம்மா அப்பா நலமா இருக்கிறாங்க.

அவனுடைய உணர்வுகளோடு விளையாடுவதற்காகவே
ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

உங்கள் குழுவில் பலர்
வெளிநாடு போவதாய் கேள்விப்பட்டேன்
தூதரக வாசலில் யாராரோ
தூக்கம் தொலைத்தார்களாமே ?
சுடர் கேட்டாள்.

குளியலறைத்தொட்டியில்
தூண்டில் போடுவதுபோல்,
நேரம் வீணாகிக் கொண்டிருப்பதாய்
தோன்றியது அவனுக்கு !

அம்மா
வேற எதாவது சொன்னாங்களா?

ம்..ம் சொன்னாங்க
உங்களுக்கு பிடிக்கிறமாதிரி
 ஒரு வார்த்தை சொன்னாங்க.

சொல்லிவிட்டு
பூக்களை உதடுகளில் உட்கார்த்தினாள் சுடர்.

அவன் இழுத்துப் பிடித்திருந்த மூச்சுக் காற்றை
மெதுவாய் வெளிவிட்டபடி கேட்டான்

என்ன சொன்னாங்க.

என்னைப் பிடித்திருப்பதாகவா ?

இல்லை.
வேறு வார்த்தை சொன்னார்கள்.

அதை சொல்வதற்கு முன்

நம் உறவை
ஒரு அவசரப் பரிசோதனை
செய்துகொள்ளலாமென்று நினைக்கிறேன்.

நட்பாய் தொடர்வதில் எனக்கு இன்னும் நிறைய
நம்பிக்கை இருக்கிறது !!

ஐயோ
இமயமலை ஏறும்போது
கால்களில் ஆணி அறையாதே.

நட்பின் எல்லைகளை நான் தாண்டிவிட்டேன்.
கடலிலிருந்து நதியை
வடித்தெடுக்க முடியாது.

அம்மா என்ன சொன்னாங்க.
அது மட்டும் சொல்லிவிடு.

கொஞ்சம் பதட்டம்
கொஞ்சம் கேள்விக்குறியோடு சொல்லி முடித்தான்.

                                                                                            பார்த்தியின் பதிவு தொடரும்…..

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *