அவள் பதில்…
வேண்டாம் இனியன்
நீங்க நல்லவங்க
ஒத்துக்கிறேன்
காதல் எல்லாம் வேண்டாம்
ஏன் என்னைப் பிடிக்கலியா ?
மூச்சுக் காற்றை இழுத்துப் பிடித்து
முனகலாய் கேட்டான்
பிடிச்சிருக்கு
ஆனா காதலில்லை !!!
ஏன் ?
காதலிக்கப் பிடிக்கலையா
இல்லை காதலே பிடிக்கலையா ??
நிதானமாய் கேட்டான்

 

ஆழமாய் யோசித்து…

அழுத்தமாய் சொன்னாள்.
இல்லை !!!
காதல் எனக்கு பிடிக்கும்.
நண்பனை போய்…. என்று இழுத்தாள் ..!
ஊரிலுள்ள எல்லா
காதலரும் சேர்ந்தால் 
மகிழ்கிறாய் …
நானும் நீயும் சேர்வதை
மட்டும் ஏன் நட்பு என்று மறுக்கிறாய் 
நான் சொல்ல்வது 
உனக்கு புரியவில்லையா 
நான் எவ்வாறு புரிய வைப்பது ..
தொட்டாச் சிணுங்கி
இதழ் சுருக்குவதுபோல
அவன் முகம் மூடிக்கொண்டது.
நீ.
வாக்கியங்கள்
வார்த்தைகளாகி
எழுத்தில் வந்து முற்றுப் பெற்றது.
ஆமாம்.
ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு
மௌனமானாள் சுடர் விழி.
வேறு வார்த்தைகள் 
அவன் நாவிலிருந்து 
வெளிவர மறுக்க 
மௌனதுடனேயே 
மௌனமாகியது தொலைபேசி ……..

                                                           
                                                                                          பார்த்தியின் பதிவு தொடரும்…..

                                                      

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *