கண்ணபிரான் போதனையான “பகவத்கீதை” ,”கீதையின் சாரம்” மனித வாழ்க்கையே போராட்டம் எனபதை பெரும் போர்களத்தில் வைத்தே பகவான் கிருஷ்ணர் தனது உண்மையான திடமான விசுவாசியும், உற்ற நண்பனும், தூய தொண்டனும், உயிர்த் தோழனும், உறவினனும் அதே காலத்தில் வாழ்ந்த மக்களுள் ஞானம், வீரம், புகழ் மிக்க போர் வீரனுமான அர்ச்சுனனுக்கு அவன் மனம் சோர்ந்து காண்டீபத்தையே கண்ணன் காலடியில் போட்டு மண்டியிட்டு மன்றாடிய போது, அர்ச்சுனனை உண்மையான ஞானி, யோகி, பக்தன், விவெகி, விராதி வீர்ன், அதிவிவேகி என்பதை உணர்ந்து கொண்டான்.
இப்படியானவன் சீடனாக அமைவது அருமையிலும் அருமை. எனவே இவன் மூலமாகவே பல்லாயிரம் வருடங்களுக்கு முன் முறிந்து சிதைந்த பரம்பரையின் புதிய பரம்பரைத் தொடர்பின் முதல் சீடனாக அர்ச்சுனனை உருவாக்கி அவன் மூலமாகவே உலக மக்களுக்காக பகவத்கீதையை அர்சுனனக்கு உபதேசிக்கிறான் கண்ண்ன். இருகையாலும் அம்பு எய்யும் திறைமை கொண்ட அர்ச்சுனன் தன் புலமை மிக்க அரும்பெரும் ஞானத்தால் தன் உள்ளத்தில் உதிர்க்கும் அத்தனை சந்தேகங்களையும் வெளிக்காட்டி கேள்வி கேட்டு வாதிட்டு அறிகின்றான். இருகையாலும் அம்பு எய்யும் திறைமை கொண்ட அர்ச்சுனன் தன் புலமை மிக்க அரும்பெரும் ஞானத்தால் தன் உள்ளத்தில் உதிர்க்கும் அத்தனை சந்தேகங்களையும் வெளிக்காட்டி கேள்வி கேட்டு வாதிட்டு அறிகின்றான்.
சதித்திட்டங்களால் அர்ச்சுனனுடைய அரசை ஆக்கிரமிக்க எண்ணிய துரியோதனின் மனத்தையும், போர்களத்தின் மத்தியிலேயே அர்ச்சுனன் மனதில் நடந்து கொண்டிருக்கும் நிலமையையும் கண்ணனால் புரிந்து கொள்ள முடிந்தது.
எதற்கும் அச்சம் பயம் கொள்ளாத அர்ச்சுனன் போர்க்களத்தில் உயிர் நஷ்டத்தை எண்ணியே மனம் தளர்ந்தான். காண்டீயம் அவன் கை விட்டு நழுவி விடுமளவு பொருமையை இழந்தான். இனியும் இங்கு நிற்க என்னால் முடியாது கண்ணா என்றான். போரிலெ வெற்றியைக் கண்டும் மகிழ்ச்சி கொள்ளாமல் உறவினர், நன்பர்கள், அன்பர்களின் உயிர் நஷ்டத்தைக் கண்டே கலங்கினான்.
எவர்களுக்காக என் வாழ்க்கையையும் போர் வெற்றியையும், அரசையும் விரும்பி போர்க்களம் வந்தவன் தன் குலத்தினரோடும், தன் உறவினரோடும் உள்ள இரத்தபாசம் அவனுக்கு ஏற்பட்ட இரக்கத்தால் வெளிப்படுகிறது.
அர்ச்சுனன் மூலமாக இவையாவும் அறிந்த கண்ணபிரானுடைய முடிவான தீர்மானம் நீதி நேர்மையில்லாத அநியாயமான அக்கிரமக்காரர்களை, சமூக விரோதிகளை சண்டானர்களை கொண்ர்றொழிக்க வேண்டும். நல்லவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவான விருப்பம் கொண்டான்.
அர்சுனா! தகாத இடத்தில் தகாத நேரத்தில் ஏன் இவ்விதம் கோழையானாய்? உனக்கு இது அழகல்ல உன் ஷத்திரிய தர்மத்திற்கே விரோதமானது, கேடானது. அர்ச்சுனா! உலகில் பன்றிகளைப் போல் வாழ்வதற்கல்ல மனிதன் பிறந்திருப்பது.
தருமஷேத்திரமான குருஷேத்திரமே போர்க்களமானது. உன் இரத்த பாச எதிரிகளால், உன் மனைவி துரொபதையின் துகில் உரிந்த சண்டாளர் அவளின் உடை களைந்தபோது, பிஷ்மர் துரோணர் மற்றும் மதிப்புக்குரிய பெரியவர்கள், மற்றும் மாவீரர்கள் எல்லோரும் மெளனமாக பேசாதிருந்தார்கள். நீ போரிடாது விட்டால் உன் மதிப்பும் போய்விடும். இந்த அவமதிப்பை உன்னால் சகிக்கவே முடியாது.
போரிட்டவாறு இறப்பாயானால் சுவர்க்கம். வெற்றியானால் பெருமையும் அரசையாளும் மகிமையும் கிடைக்கும். போர்புரிவதே உன்கடமை. அதை நடுநிலையான மனதுடன் செய். வெற்றி தோல்வியில் பற்று வைக்கதே. இந்த அநியாய அக்கிரம சண்டாளர்கள் அசுர மனம், அரக்க குணம் கொண்டவர்கள். சமூகத்திற்க்கு உதவாதவர்கள். இவர்களை கொண்றொழிக்கவே வேண்டும்.கொல்வதற்கு பயப்படாதே. இவர்களை ஏறேற்கனவே கொன்றுவிட்டேன். கொல்வதற்கு பயபடாதே. உன் பக்கம் நான் இருக்கிறேன். உனக்காகவே சாரதியாகி தேரோட்டியாக செயல்படுகிறேன். எனவே நீ கவலைப்படாதே. தொடர்ந்து போர் செய். உனக்கே வெற்றி நிச்சயம்.
நல்லவர்களை காப்பாற்றவும், கொடியர்களை அழ்த்து தர்மம், நீதியை நிலை நாட்டவே நான் விரும்பி அவதரிக்கிறேன். இவ்வாறு கண்ணன் போதிக்கிறார் பகவத் கீதையில்.