சுவாரஷ்யமான
உன் அனுபவங்களோடு
தினமும் உறவாட வேண்டி
என் உயிர் மூச்சை
கேட்கிறேன்!
அது தான் உன் நட்பு
காரணம் நீ தான்…
உன் அன்பும் பாசமும் தான்.

அன்பெனும் முள்ளால்
குத்தி என்
இதயக்கூட்டை
தினமும் வலி
செய்கிறாய் !!!
உன் விழிகளில்
என்னை காணும்
வேளை யாவும்…

என்னுள்ளே கேட்டுக்
கொள்கிறேன்…
என்றோ ஓர் நாள்
உன் பிரிவை எப்படி
தாங்குவேன்????

Kirush Shoban

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *