அறிவியல் எமக்களித்த பேஸ்புக் எனும் சமூக வலையமைப்பினூடாக இலக்கிய ஆர்வலர்கள் பலரை ஒருங்;கிணைத்துக்கொண்ட யாழ் இலக்கியக் குவியம் தமது இலக்கியப் படைப்பாகிய ‘நாம்’ எனும் கவிதை நூலை இரண்டாவது தடவையாக எம் கைகளில் தவழ விட்டிருப்பது தமிழ்மீது பற்றுடைய எம் அனைவருக்கும் மகிழ்வளிக்கும் இவ்வேளையில் இன்றைய கவிதைகள் எவ்வாறு அமையவேண்டும் என்ற எனது விருப்பினையும் கருத்தையும் இக்கவிதை இதழினூடாக பகிர்ந்து கொள்கிறேன்.
கவிதைகள் படிப்பவர் எல்லோருக்கும் எளிதில் புரியக்கூடியதாகவும் சமூகம் சார்ந்த கருத்துக்களை அதிகம் தாங்கியவையாகவும் அமைய வேண்டும். அன்றைய காலம் சமூகம் சார்ந்த எண்ணக்கருக்களை தமது பாடுபொருளாகக் கொண்டு கவிபுனைந்த கவிஞர்கள் தாம் வாழ்ந்த காலப்பகுதியில் தமது சமூகத்தில் புரையோடிக்காணப்பட்ட புன்மைகளை தமது கவிகளினூடாக சுட்டிக்காட்டி அவற்றைக் களைய முற்பட்டனர். ஆனால் இன்று எமது படைப்பாளிகளால் சமூகத்தை ஆற்றுப்படுத்தக்கூடிய கவிதைகள் வெளியிடப்படுவது மிகக்குறைவாகவே காணப்படுகிறது. இன்றைய கவிதைகள் பெரும்பாலும் காதல் பற்றியும் பெண்களைப்பற்றியுமே அதிகமாகப்பேசுகின்றன.
எனவே இந்நிலைமாற்றி இன்று வளர்ந்து வரும் எமது இளையதலைமுறைக் கவிஞர்கள் எமது சமூகத்தின் தேவையோடு ஒட்டியதாக தமது எண்ணங்களைப் பதிவுசெய்ய வேண்டும். தமிழர்தம் கலாசார அம்சங்களைத் தாங்கி உங்கள் கவிவரிகள் அமையவேண்டும் என்பதே சமூகப்பிரக்ஞை உள்ளவர்களது பெருவிருப்பாகும்.
 

ஜெ.வினோத்  – யாழ் கலாசாரமையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *