மதம் – அறிவற்ற மூட நம்பிக்கை – குருட்டுப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கூட்டுப் பொருளாக இருக்கிறது.

அளவுக்கு மீறி குருட்டுப் பழக்க வழக்கங்களில் மூட நம்பிக்கைகள், மனத்தைச் செலிவிடுவது மனித சிந்தனையை – செயல்திறனை மழுங்கச் செய்கிறது.

மக்கள் கருணைமிக்க இந்த் கடவுளிடத்திலே தான் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்! தோல்விக்கு மேல் தோல்விகளும், துன்பங்களும் துயரங்களும் நேர்ந்தாலும் அவர்கள் ஆண்டவனிடத்திலே வைத்த அந்த நம்பிக்கை தளர்வதில்லை. அவை எல்லாவற்றையும் ஆண்டவனுடைய சோடனை என்று கருதி ஏற்றுக்கொள்கின்றனர்.

கடவுளின் மீதும், மதத்தின் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையை, பகுத்தறிவோடு ஆராய்ச்சி செய்து பார்த்தால் குழப்பந்தான் உண்டாகும். ஆனால் ஏதோ உள்ளணர்வு அந்த நம்பிக்கைகளை விடாப்படியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நம்பிக்கைகளும் பிடிப்புகளும் இலையென்றால், வாழ்க்கை அர்த்தமற்றதாக – வறண்ட பாலைவனமாக ஆகிவிடும்.

“நீ எதை ஏற்க விரும்பவில்லையோ அதைப் பிறர்க்குச் செய்ய நினைக்காதே” – என்ற உபதேசத்தில் மகாபாரதக் கதையின் த்த்துவமே அடங்கி இருக்கிறது. தனி மனிதனின் மன நிறைவைப் பற்றிய இந்திய மக்களின் சிந்தனை. எவ்வளவு உயர்ந்ததாக இருந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

மத்தத்தையும்,மூட நம்பிக்கைகளையும் குருட்டுப்பழக்க வக்கங்களையும், குருமார்களின் ஷாட பூதித்தனத்தையும் தைரியமாக்க் கண்டித்தவர் புத்தர். அவருடைய போதனைகள், புழக்கத்தைக் கடந்து, மலையில் இருந்த தவழ்ந்து வரும் இனிய காற்றைப் போல் வெளிவந்தன.

இந்து தேச சரித்திரத்தின் நீண்ட நெடுங்கால வரலாற்றில், சாதி மதக் கொடுமைகளை எதிர்த்து அறிஞர்கள் அடிக்கடி போராடி இருக்கின்றனர்.

வேலையற்றவர்களும் சோம்பேறிகளுந்தான் அதிர்ஷ்டத்தையும் ஆண்டவனையும் நம்பிக் கொண்டு திரிவார்கள் – மற்றவர்களைத் தூற்றுவதையும் பழிப்பதையும் தொழிலாகக்கொண்டு கிடப்பார்கள்.

நம்மை எத்தனையோ வியாதிகள் பீடித்திருக்கின்றன. நம்முடைய மனநோயை முதலில் போக்கிக் கொள்ள வேண்டும் – நம்மையே நாம் அடக்கியாளக் கற்றுக் கொள்ள வேண்டும். மூட நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும். சத்தியத்தையே அடிப்படைத் தத்துவமாக்க் கொண்ட, இந்திய மண்ணின் லட்சியங்களுக்கு – முற்றும் புறம்பான மூட நம்பிக்கை.

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *