தலவரலாறு: மலேசியாவின் கோலாலம்பூரில் லோங் ஸ்காட் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலாகும்.தமிழர்கள் அதிக அளவில் வசித்த இலங்கையின் ஜாப்னா பகுதியில் 1620 மற்றும் 1685-ம் ஆண்டின் பிற்பகுதியில் போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சியால் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் அதிகளவில் காணப்பட்டது. 1795-லிருந்து 1850-ம் ஆண்டு வரை பிரிட்டீசாரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் ஜாப்னாவில் ஆங்கிலம் மற்றும் தமிழுடன் ஜாப்னா மொழியும் பயிற்றுவிக்கப்பட்டது. இதற்கான பள்ளி மற்றும் கல்லூரிகளைக் கொண்டு 1874-ம் ஆண்டில் சாலை அமைத்தல், ரயில்வே,பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களும் மலேயா கடற்கரை பகுதிகள் மேம்படுத்தப்பட்டது. திறமை வாய்ந்த அலுவலர்களைக் கொண்டு பிரிட்டீசார் தங்களின் அரசை விரிவுபடுத்த எண்ணியதால், தனது அண்டை நாடான இலங்கையின் பிரச்சனைக்கு தீர்வு காண முன்வந்தது மலேசிய அரசு. இதனால் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தங்கள் வசம் அனுப்ப மலேசிய அரசு விடுத்த கோரிக்கையால் அவர்கள் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மலேசியாவின் ரயில்வே துறை நிர்வாக அலுவலகத்திற்கு அருகில் கோலாலம்பூர் பகுதியில் இலங்கை தமிழர்கள் அதிகளவில் குடியேறினர். மலேசிய அரசு அவர்களுக்கு வெள்ளை மற்றும் ஊதா நிறத்தாலான கட்டிடங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தது. இவ்விரண்டு இடங்களிலும் வாழ்ந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கென ஓர் இயக்கம் அமைத்து அதன் இப்பகுதியில் கோயில் ஒன்றை எழுப்ப முடிவு செய்தனர். மலேசியாவின் பிர்க்பீல்டு பகுதியில் அதிகளவில் வாழ்ந்த ரயில்வே ஊழியர்கள், ஸ்ரீ ஆறுமுக நாவலரின் பின்னோடியான சைவ சித்தாந்த ஆசிரியர் சிவபாதசுந்தரனாரின் வழிகாட்டுதலின் பேரில் ஆகமவிதிப்படி வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் இப்பகுதியில் சைவ சித்தாந்த முறைகளின்படி விரதம்,திதிகள், புண்ணியகவசம், கந்தசஷ்டி போன்ற விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. அந்த சமயத்தில் 1890-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி மலேசிய உயரதிகாரியின் தலைமையில் அப்பகுதியில் சுப்ரமணியருக்கு என்று தனியான நிலம் பெற்று கோயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 1901-ம் ஆண்டு சிலெங்கார் பகுதி இலங்கை தமிழர் இயக்கத்தினரால் ஜெலன் ஸ்காட் பகுதிக்கும் கிளாங் நதிக்கும் இடையே அமைந்த நிலம் பெறப்பட்டது. 1902-ம் ஆண்டு இக்கோயிலின் கட்டிடப் பணிகள் தவங்கப்பட்டது. 1903-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி இக்கோயிலுக்கான நிர்வாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதலில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோபுரத்துடனான சிறிய ஆலயமாக 1909-ம் ஆண்டு இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. அருள்மிகு கந்தசாமி கோயிலின் முதல் கும்பாபிஷேகம் 1909-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதியன்று நடத்தப்பட்டது.
கோயில் நேரம் : காலை 5.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் திறந்திருக்கும் நேரங்களாகும். இக்கோயிலில் காலை 7 மணி, பகல் 12 மணி மற்றும் மாலை 6.30 மணி ஆகிய வேளைகளின் போது தினசரி பூஜைகள் நடத்தப்படுகின்றன. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரை சமய வகுப்புக்களும், வெள்ளிக்கிழமைகளில் பஜனை வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன.
முக்கிய விழாக்கள் : 11 நாட்கள் நடத்தப்படும் மஹோற்சவம், 7 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழா, 15 நாட்கள் நடைபெறும் கதிர்காம கொடியேற்றம் போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
தலவரலாறு: மலேசியாவின் கோலாலம்பூரில் லோங் ஸ்காட் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலாகும்.தமிழர்கள் அதிக அளவில் வசித்த இலங்கையின் ஜாப்னா பகுதியில் 1620 மற்றும் 1685-ம் ஆண்டின் பிற்பகுதியில் போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சியால் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் அதிகளவில் காணப்பட்டது. 1795-லிருந்து 1850-ம் ஆண்டு வரை பிரிட்டீசாரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் ஜாப்னாவில் ஆங்கிலம் மற்றும் தமிழுடன் ஜாப்னா மொழியும் பயிற்றுவிக்கப்பட்டது. இதற்கான பள்ளி மற்றும் கல்லூரிகளைக் கொண்டு 1874-ம் ஆண்டில் சாலை அமைத்தல், ரயில்வே,பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களும் மலேயா கடற்கரை பகுதிகள் மேம்படுத்தப்பட்டது. திறமை வாய்ந்த அலுவலர்களைக் கொண்டு பிரிட்டீசார் தங்களின் அரசை விரிவுபடுத்த எண்ணியதால், தனது அண்டை நாடான இலங்கையின் பிரச்சனைக்கு தீர்வு காண முன்வந்தது மலேசிய அரசு. இதனால் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தங்கள் வசம் அனுப்ப மலேசிய அரசு விடுத்த கோரிக்கையால் அவர்கள் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மலேசியாவின் ரயில்வே துறை நிர்வாக அலுவலகத்திற்கு அருகில் கோலாலம்பூர் பகுதியில் இலங்கை தமிழர்கள் அதிகளவில் குடியேறினர். மலேசிய அரசு அவர்களுக்கு வெள்ளை மற்றும் ஊதா நிறத்தாலான கட்டிடங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தது. இவ்விரண்டு இடங்களிலும் வாழ்ந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கென ஓர் இயக்கம் அமைத்து அதன் இப்பகுதியில் கோயில் ஒன்றை எழுப்ப முடிவு செய்தனர். மலேசியாவின் பிர்க்பீல்டு பகுதியில் அதிகளவில் வாழ்ந்த ரயில்வே ஊழியர்கள், ஸ்ரீ ஆறுமுக நாவலரின் பின்னோடியான சைவ சித்தாந்த ஆசிரியர் சிவபாதசுந்தரனாரின் வழிகாட்டுதலின் பேரில் ஆகமவிதிப்படி வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் இப்பகுதியில் சைவ சித்தாந்த முறைகளின்படி விரதம்,திதிகள், புண்ணியகவசம், கந்தசஷ்டி போன்ற விழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. அந்த சமயத்தில் 1890-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி மலேசிய உயரதிகாரியின் தலைமையில் அப்பகுதியில் சுப்ரமணியருக்கு என்று தனியான நிலம் பெற்று கோயில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 1901-ம் ஆண்டு சிலெங்கார் பகுதி இலங்கை தமிழர் இயக்கத்தினரால் ஜெலன் ஸ்காட் பகுதிக்கும் கிளாங் நதிக்கும் இடையே அமைந்த நிலம் பெறப்பட்டது. 1902-ம் ஆண்டு இக்கோயிலின் கட்டிடப் பணிகள் தவங்கப்பட்டது. 1903-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி இக்கோயிலுக்கான நிர்வாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதலில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோபுரத்துடனான சிறிய ஆலயமாக 1909-ம் ஆண்டு இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. அருள்மிகு கந்தசாமி கோயிலின் முதல் கும்பாபிஷேகம் 1909-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதியன்று நடத்தப்பட்டது.
கோயில் நேரம் : காலை 5.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் திறந்திருக்கும் நேரங்களாகும். இக்கோயிலில் காலை 7 மணி, பகல் 12 மணி மற்றும் மாலை 6.30 மணி ஆகிய வேளைகளின் போது தினசரி பூஜைகள் நடத்தப்படுகின்றன. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரை சமய வகுப்புக்களும், வெள்ளிக்கிழமைகளில் பஜனை வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன.
முக்கிய விழாக்கள் : 11 நாட்கள் நடத்தப்படும் மஹோற்சவம், 7 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விழா, 15 நாட்கள் நடைபெறும் கதிர்காம கொடியேற்றம் போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
வவுனியாவிலிந்து
துசி குமாரசாமி
