யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப் பீட பீடாதிபதியாக பேராசிரியர் வி.பீ.சிவநாதன் இன்று புதன்கிழமை பதவியேற்றுள்ளதாக யாழ். பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பீடாதிபதி தெரிவு வாக்கெடுப்பில் போட்டி எதுவுமின்றி பொருளியல் துறை பேராசிரியரான சிவநாதன் பீடாதிபியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ். பல்கலையின் கலைப் பீட பீடாதிபதியாக பேராசிரியர் என்.ஞானக்குமரன் முன்னர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.