வான் வழிப் பயணங்களின் போது ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக ரோபோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பறக்கும் கருவி ஒன்றை சுவிஸ் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தூசு துணிக்கைகள், ஏனைய வான்பொருட்களுடன் மோதும் சந்தர்ப்பங்களில் தானாகவே பறப்பை நிறுத்தி மீண்டும் சாதகமான நிலைமை ஏற்படும்போ-து, பறக்கும் தன்மையைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது. இந்த ரோபோவை ஆபத்து மிக்க பகுதிகளான குகைகள், அணு ஆராய்ச்சி தொடர்பான பகுதிகளில் பயன்படுத்த முடியும் என அதனை வடிவமைத்த ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.