யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்கு சிங்கர் நிறுவனத்தினால் தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்
சத்திர சிகிச்கைக்காக அனுமதிக்கப்படும் நோயாளர்களின் உள ஆற்றுப்படுத்தலுக்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் இந்த எல் சீடி ரக தொலைக்காட்சிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தனியார் நிறுவனங்கள் நோயாளர்களின் நலன்களுக்காக பாரிய உதவித் திட்டங்களை வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.