வாழ்க்கை எனும் நாடகத்தை பூமி எனும் அரங்கிலே
மேடை ஏற்றினான் இறைவன் எனும் இயக்குனன்

நட்பென்ன காதலென்ன இரெண்டும்
புரியாது எதிரொலிக்கும் அதிசய களமிது

இன்பம் துன்பம் வெற்றி தோல்வி என்பதும்
எந்த மனித வாழ்விலும்  நிரந்திரமில்லையே
அலைகள் எனும் தடையெனை எதிர்த்து செல்லும் மீன்கள்போல்
சோதனையை சாதனையாக மாற்று

அன்பும் நட்பும் சங்கமித்து உருவானது காதல்
ஒப்பில்லாத உணர்வென்று உலகமே வியக்குதெடா
சொல்லித் தெரிவதில்லை சொன்னாலும் புரிவதில்லை
காதலித்துப் பார் அதன் அருமையும் பெருமையும்

தித்திக்கும் எண்ணங்கள் தினம் தினம் தோணுதடா-என்
அருகினில் நீ இருந்தால் இந்த அகிலமே என் சொந்தமடி
இதயம் சாகவில்லை இமைகள் மூடவில்லை- சாவிலும்
என் விண்ணப்பம் உயிரே உன்னைத் தொடர

உன் நினைவால் தீ இப்பவே எரியுதடி
காதல் நீர் ஊற்றி அணைக்க வா
என் இதயம் என்பதற்காக அல்ல அதில்
இருப்பவள் நீ என்பதற்காக

இழப்பினை சந்தித்த முதல் மனிதன் நானும் அல்ல
இழப்பு சந்தித்த முதல் மனிசி நீயும் அல்ல
சில கனிகள் பிஞ்சிலேயே வெம்புவது ஒன்றும் புதிதல்ல
இதுவும் அது போல தானோ தெரியாது.

                                                                        – எழுத்துரு நண்பன் கோபால்.

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *