கணினியின் மூளையாக செயற்படும் மையச் செயற்பகுதியின் (CPU) உள்ளேயோ அல்லது தாய்ப்பலகையில் மையச் செயற்பகுதியின் அருகிலேயோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) பதுக்கு நினைவகம் எனப்படுகிறது. ஒரு செயலியை(program) இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்பப் பயன் படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே மையச் செயற்பகுதி இந்த பதுக்கு நினைவகப் பயன் படுத்துகிறது. இதனால் கணினியின் வேகம் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கிறது. கணினியில் பதுக்கு நினைவகம் பயன் படுத்தப்படுவதன் முக்கிய அனுகூலம் யாதெனில் தகவல்களைக் கடத்துவதற்கென அமைக்கப் பட்டிருக்கும் தாய்ப்பலகையிலுள்ள சிஸ்டம் பஸ் (system bus) எனும் பாதைகளை மையச் செயற்பகுதி பயன் படுத்த வேண்டிய தேவை அற்றுப் போகிறது. சிஸ்டம் பஸ் ஊடாக தகவல் பயணிக்கும் போது தாய்ப்பலகையின் செயற்திறனுக்கமைய அதன் வேகம் குறைகிறது. சிஸ்டம் பஸ்ஸில் நெருக்கடி நிலை தோன்றும் சந்தர்ப்பங்களில் அதனைத் தவிர்த்து மையச் செயற்பகுதி பதுக்கு நினைவகத்தை அணுகி அதிக வேகத்தில் தகவலைப் ப்ரோஸெஸ் செய்து விடுகிறது.

பதுக்கு நினைவகத்தில் இரண்டு வகைகளுள்ளன.
1.மையச் செயற்பகுதியினுள்ளேயே இணைந்து வரும் பதுக்கு நினைவகமானது Level 1 (L1) cache எனவும்
2.மையச் செயற்பகுதியில் வேறாக பொருத்தப்பட்டுள்ள பதுக்கு நினைவகமானது Level 2 (L2) cache. எனவும் அழைக்கப்படுகிறது.

மையச் செயற்பகுதியினுள்ளேயே பொருத்தப்பட்டிருக்கும் பதுக்கு நினைவகமானது மையச் செயற்பகுதியில் தனியாகப் பொருத்தப்பட்டிருக்கும் பதுக்கு நினைவத்தை விட வேகமாக செயற்படக் கூடியது. அதாவது மையச் செயற்பகுதியின் வேகத்திலேயே இது இயங்கும். தனியாகப் பொருத்தப்படும் பதுக்கு நினைவகமானது பிரதான நினைவகமான RAMமை விட இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கக் கூடியது. எனவே மையச் செயற்பகுதியிலேயே பொருத்தப்படும் பதுக்கு நினைவகமே சிறந்தது எனலாம்.


அதிக வேகம் கொண்ட மையச் செயற்பகுதியுடன் குறைந்தளவு பதுக்கு நினைவகத்தைப் பயன் படுத்தும்போது கணினி செயற் திறனில் மாற்றத்தை அவதானிக்க முடியாது. மாறாக குறைந்த மையச் செயற்பகுதியின் வேகத்துடன் அதிக பதுக்கு நினைவகத்தைப் பயன் படுத்தும் கணினிகளின் செயற் திறனில் அதிக மற்றத்தை அவதானிக்க் முடியும்.


மையச் செயற்பகுதியில் பயன் படுத்தப்படும் பதுக்கு நினைவகத்தைப் போன்றே வன்தட்டு நிலை நினைவகத்திலும் டிஸ்க் கேஷ் எனப்படும் தொழில் நுட்பம் பயன் படுத்தப் படுகிறது. அதாவாது வன்தட்டு நிலை நினைவகத்திலிருந்து அடிக்கடி அணுகப்படும் தகவலானது திரும்பத் திரும்ப வன்தட்டு நிலை நினைவகத்திலிருந்தே பெறப்படுவதைத் தவிர்த்து நினைவகத்தின் ஒரு பகுதியில் சேமிக்கப்படும். இங்கு வன்தட்டு நிலை நினைவகத்தை விடவும் பிரதான நினைவகம் (RAM) வேகம் கூடியது என்பதனாலேயெ இவ்வாறு நினைவகத்தில் தேக்கி வைக்கப்படுகிறது, எனினும் இந்த தொழில் நுட்பம் எதிர் காலத்தில் மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது வன்தட்டு நிலை நினைவகமானது ப்ளேஷ் மெமரி (flash memory) உடன் வெளி வர ஆரம்பித்துளளது. இந்த ப்ளேஷ் மெமரி நினைவகத்தை விடவும் வேகமாக செயற்படக் கூடியது

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *